5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு 60 மதிப்பெண்களுக்கே நடைபெறும் - பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை முழு விவரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2020

5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு 60 மதிப்பெண்களுக்கே நடைபெறும் - பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கை முழு விவரம்.


தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ( Continuous and comprehensive Evaluation ) 2012 - 2013 ஆம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . இம்முறையில் வளரறி ( Formative Assessment ) மதிப்பீட்டிற்கு 40 மதிப்பெண்களும் தொகுத்தறி பதிப்பீட்டிற்கு ( Summative Assessment ) 60 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

வளரறி மதிப்பீடு FA ( a ) + FA ( b ) என இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன . இதில் FA ( a ) - ல் ப்ராஜெக்ட் , மாதிரி வடிவமைத்தல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை சம்மந்தப்பட்ட பள்ளிப் பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன . இதேபோல் FA ( b ) - ல் ஒவ்வொரு பாட அலகிலும் சிறு சிறு தேர்வுகள் நடத்தி மதிப்பீடு செய்து அவைகளுக்கு 20 மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட பள்ளிப் பாட ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றன . மேலும் தொகுத்தறி மதிப்பீட்டில் ( Summative Assessment ) பாடப்பகுதியில் உள்ள பாடக்கருத்துக்களில் மாணவர்களின் கற்றல் விளைவுகள் ( Learning outcome ) மதிப்பீடு செய்ய வினாத்தாள் பள்ளி அளவிலோ , வட்டார அளவிலோ மற்றும் மாவட்ட அளவிலோ தயாரித்து 60 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன .

 தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்விற்கு வளரறி மதிப்பீட்டின் FA ( a ) மற்றும் FA ( b ) 40 மதிப்பெண்களுக்கு ஏற்கனவே 22.10.2019ல் தொடக்கல்லி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சம்மந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியர்களால் மதிப்பீடு செய்து வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் . மேலும் தொகுத்தறி மதிப்பீட்டில் சீரான முறையில் வினாத்தாள் அமைக்க வேண்டி உள்ளதாலும் வினாத்தாட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளதாலும் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் சீரான முறை மற்றும் நியாயமான மதிப்பீடு முறை ( Fair Assessment ) நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளதாலும் தொகுத்தறி மதிப்பீட்டின் 60 மதிப்பெண்களுக்குரிய பகுதிகளுக்கு வினாத்தாட்கள் அரசுத் தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் வாயிலாக மந்தன முறையில் பள்ளிகளுக்கு வழங்கி தேர்வுகள் நடத்தப்படும் .

விடைத்தாள்கள் அந்த அந்த CRC மைய அளவில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றி கொடுத்து திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும் . இந்நடைமுறையால் மாணவர்கள் மாநிலம் முழுவதும் பாடக்கருத்து மற்றும் கற்றல் விளைவுகளில் பெற்றுள்ள கற்றல் அடைவுகளை ஒரே மாதிரியாக சோதித்தறியவும் , நியாயமான மதிப்பீடு ( Fair Assessment ) செய்யவும் , மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்க ஏதுவாக அமையும் . மேலும் , 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான தேர்வில் அரசாணை ( நிலை ) எண் . 164 நாள் 13.09.2019 - ன்படி ஆண்டு இறுதித் தேர்வு அடிப்படையில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அரசு ஆணையிட்டுள்ளது . எனவே , 5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி