பிப்ரவரி 5 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2020

பிப்ரவரி 5 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!


நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது. நாகையில் இருந்து இந்த சந்தனக்கூடு புறப்பட்டு 5.2.2020 தேதி அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்விழாவை முன்னிட்டு பிப்ரவரி 5 ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு விடுமுறை என்றும், விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பிப்ரவரி 29 அன்று முழு வேலைநாளாக செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி