8ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள், 'தத்கல்' சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத் துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2020

8ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள், 'தத்கல்' சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத் துறை அறிவிப்பு.


'எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள், 'தத்கல்' சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரலில் நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்கள், ஜனவரி, 27 முதல், 31 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும், 10 முதல், 12ம் தேதி வரை, தத்கல் சிறப்பு கட்டண திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுத்துறையின் சேவை மையங்களுக்கு சென்று, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம், 125 ரூபாய், சிறப்பு கட்டணம், 500 ரூபாய், ஆன்லைன் பதிவுக்கு, 50 என, மொத்தம், 675 ரூபாய் கட்டணத்தை, சேவை மையங்களில் செலுத்தலாம்.

இது குறித்த விரிவான விபரங்களை, தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற,இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. எட்டாம் வகுப்பு தனி தேர்வின் விண்ணப்பி்த்தினை திருத்தம் செய்ய முடியுமா...பிறந்த தேதி தவறாக உள்ளது...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி