தொடக்கக் கல்வித்துறையில் இரட்டை அதிகாரம் - விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2020

தொடக்கக் கல்வித்துறையில் இரட்டை அதிகாரம் - விடுப்பு எடுக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள்

வட்டாரக் கல்வி அலுவலர் , குறு வள மைய ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் செலுத்துவதால் தொட க்கக் கல்வித்துறையில் குழப்பம் நீடிக்கிறது . இதனால் தொடக்க , நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடியாமல் தவி க்கின்றனர் .

தமிழகத்தில் மாவட்ட அளவில் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் தொடக்க , நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன . கடந்த ஆண்டு கல்வித் துறையில் செய்யப்பட்ட சீர்த்திருத்தத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலு வலகங்கள் கலைக்கப்பட்டன . தொடக்க , நடுநிலைப் பள் ளிகள் மாவட்டக் கல்வி அலு வலகங்களுடன் இணைக்கப்பட் டன . இதற்காக மாவட்டக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன . மேலும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் , வட் டாரக் கல்வி அலுவலர் பணி மாற்றுப்பணியாக வட்டாரக் கல்வி அலுவலர் நியமிப்பார் . தற்போது மாற்றுப் பணி வழங்கும் அதிகாரம் குறுவள மைய ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . அவரது கட்டுப்பாட்டில் 10 முதல் 13 பள்ளிகளே உள்ளன . தற்போது 10 - க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியில் உள்ளார் .

இதனால் மாற்றுப் பணி வழங்குவதில் சிக்கல் உள்ளது . இதையடுத்து ஆசிரியர்கள் விடு ப்பு எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர் . இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் , ஊதியம் வழங்கும் அதிகாரம் வட்டாரக் கல்வி அலுவலரிடமும் , விடுப்பு , மாற்றுப் பணி வழங்கும் அதிகாரம் குறுவள மைய ஒருங்கிணைப்பாளரிடமும் வழங்கியது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது . இத னால் பழையபடி வட்டார கல்வி அலுவலரிடமே அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் , என்று கூறினர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி