வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு தொலைதூரத்தில் மையங்கள் அமைத்தது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2020

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு தொலைதூரத்தில் மையங்கள் அமைத்தது ஏன்? ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!


2018-19-ம் ஆண்டுக்கான வட்டார கல்வி அலுவலர் பணிகளில் காலியாக உள்ள 97 இடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கான கணினி வழித் தேர்வு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி (நாளை மறுதினம்) வரை நடைபெற இருக்கிறது.

57 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு மையங்கள் தாங்கள் தேர்வு செய்திருந்த விருப்ப இடங்களை தவிர்த்து தொலைதூரத்தில் மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது.அதிலும் ஆண் தேர்வர்களுக்குதான் இப்படி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- முறைகேடுகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற வகையிலும் வெளிமாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளை போல், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளிலும் முறைகேடுகள் நடக்கக்கூடாது என்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதியாக இருக்கிறது.தேர்வர்களுக்கு மட்டுமல்லாது தேர்வு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கும் வெவ்வேறு இடங்களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் பெண் தேர்வர்களுக்கு மட்டும் அவரவர் விருப்ப பட்டியலை பொறுத்து மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

23 comments:

  1. Porandhalum boysa porakka kudadhu...
    😂😅😂😅

    ReplyDelete
  2. தொலைதூரத்தில் தேர்வு நடத்தியும் , முறைகேடு நடந்தால் பிறகு வெளிநாட்டில் தேர்வு நடத்துவீரோ...கேடுகேட்ட கோமாளி அரசுக்கு நேர்மையாக ஒரு தேர்வு நடத்த துப்பில்லை இதுல Award வேரா தூதூதூ........

    ReplyDelete
  3. ந‌ன்றாக‌ சொன்னீர்க‌ள்...

    அப்புற‌ம் முறைகேட்டில் ஈடுப‌ட்ட‌தாக‌ கைதான‌வ‌ர்க‌ளில் பெண்க‌ளும் அட‌க்க‌ம் என்ப‌தை த‌ங்க‌ளின் க‌னிவான‌ க‌வ‌ன‌த்திற்கு கொண்டு வ‌ருகிறேன்...

    ReplyDelete
  4. Deal ellam mudinchit irukum ethiku exam

    ReplyDelete
  5. Thappu ketta recruitment board TRB

    ReplyDelete
  6. Exam fee 500 transport ku 1000 unga appana kudupan elathukum pass panna porathu illa katna fee kavathu exam elutha polam na Athulayum ipdi panni tholachurukan thuppu ketta recruitment board

    ReplyDelete
  7. Pg trb economics 2020.guidance and study material 7598714479

    ReplyDelete
  8. Ladies kooda than da fraud thanam pandranga...

    ReplyDelete
    Replies
    1. எங்கு காசு கொடுத்தால் காரியம் நடக்கும், போலி சான்றிதழ் கிடைக்கும், தொலைநிலைக் கல்வி பட்டம் வீட்டில் இருந்து தேர்வு எழுதலாம் போன்ற அனைத்து உயர்ந்த செயல்களிலும் கொடிகட்டி பறக்குறாளுக

      Delete
  9. Kollai adikira kedu ketta board....trb

    ReplyDelete
  10. இதெல்லாம் எவ்வளவு கிறுக்குத்தனமாக இருக்கு....
    தவறுகள் நடக்குது என்றால் தவறுகளுக்கு உடந்தையாக செயல்படும் அனைவரையும் பாரபட்சமின்றி களைவதை விட்டு விட்டு செலவுகளையும்,அளைச்சழையும் தேர்வர்களின் மீது ஏற்றுவது,
    ஆட்டோ ஓடுவதற்கு கண்ணாடியை சரிசெய்வதற்குச் சமம்.....

    ReplyDelete
    Replies
    1. அருமை... அருமை...
      சீப்பை எடுத்துட்டா கல்யாணம் நின்னு போயிடும்.

      Delete
  11. இப்போ கணினி வழி தேர்வு என்பதால், வினாத்தாளை கணினியில் பதிவேற்றுவது முதல் விடைத்தாள்களை திருத்துவது தேர்வு முடிவு அறிவிப்பது என அனைத்தையும் தனியார் நிறுவனமே மேற்கொள்ளும். ஆசிரியர் தேர்வு வாரியம் கையை கட்டி (நீட்டி) வேடிக்கை (வாடிக்கையான மாமூலை) பார்த்துக்கொண்டு (வாங்கிக்கொண்டு)இருக்கும்.

    ReplyDelete
  12. ஆடத் தெரியாதவன் மேடை கோனல் என்றானாம்.

    ReplyDelete
  13. கோர்ட்ல கேஸ் போட்டுட்டு சென்னை, மதுரை, டெல்லினு போக முடியுது. தமிழ்நாட்டுல இருக்குற கன்னியாகுமரி, கோயம்புத்துர்ர், திருப்பூர் ..... சென்று தேர்வு எழுத முடியாதா. வட்டாரக் கல்வி அலுவலர் பதவி கிடைச்சா தினமும் ஊர் ஊரா சுத்தனும். அதுக்குதான் இப்பவே பயிற்சி தருகிறார்கள்.

    ReplyDelete
  14. Coimbatore la potta ennai kanchipuram pottu irukanka.. nan exam pokalai

    ReplyDelete
  15. TRB Very Very Very idiot...THIRUVARUR to ERODE 280 KM ....I am absent.... Because TRB is great fraud...This is wasting our times...and money...

    ReplyDelete
  16. trb cheating with students for examiners very fool fellow. how to go long place money waste time waste .useless fellow trb

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி