நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2020

நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!


தனியார் நிறுவனங்கள் நிதியுதவியுடன் நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் வழங்கும் சி.எஸ்.ஆர். நிதி மூலம் 35 ஆயிரம் பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதே வழிமுறையில்நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த ஆண்டு பொதுத்தேர்வு கொண்டுவந்தபோது, அனைவரும் அச்சப்பட்டனர். ஆனால், 97 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். நீட்தேர்வுக்கு தேவையான பாடங்கள், பிளஸ் 2 பாடப் புத்தகத்திலேயே உள்ளன என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி