அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் ( 6 - 14 ) பள்ளியில் சேர்த்தல் , பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் , மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் சமூக ஆண் , பெண் இன வேறுபாட்டினால் மாணவர்களின் கற்றல் அடைவுகளில் ஏற்படும் இடைவெளியை முற்றிலும் களைதல் என அனைத்திலும் முனைப்புடன் செயல்பட்டு ஒவ்வொரு பள்ளியையும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள சிறப்பம்சங்களைக் கொண்ட பள்ளிகளாக மாற்றுவதற்கான நோக்கோடு பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் மற்றும் தயாரித்த பள்ளி வளர்ச்சித் திட்டம் பற்றிய விவரங்களை அந்தந்த வட்டார வளமைய அளவில் பராமரித்தல் எனப் பள்ளி மேலாண்மைக் குழுவின் பணி மிகவும் இன்றியமையாததாக உள்ளது .
இதனைக் கருத்தில் கொண்டு மத்திய திட்டக் குழுவின் அறிவுறுத்தலின் படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பயிற்சி 24 . 01 . 2020 வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பயிற்சி பெறாத இதர உறுப்பினர்களுக்கும் பள்ளிக்கு 6 பேர் வீதம் ஒரு நாள் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பயிற்சி மாவட்ட அளவில் 25 . 02 . 2020 அல்லது 26 . 022020 தினத்தில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி