School Morning Prayer Activities - 27.02.2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2020

School Morning Prayer Activities - 27.02.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.02.20

திருக்குறள்

அதிகாரம்:கல்வி

திருக்குறள்:391

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம்:

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்கவேண்டும். கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நடக்கவேண்டும்.

பழமொழி

What the heart thinketh the tongue speaketh

 உள்ளத்தின் நிறைவினால் வாய் பேசும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவது வாழ்க்கை என்று நினைப்பவன் வாழ்கிறான் முள் என்று நினைப்பவன் வீழ்கிறான்....

பொது அறிவு

1.ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?

ஏழு

2.மனித கண்களின் எடை எவ்வளவு?

1.5 அவுன்சு.

English words & meanings

Camara - chamber, a separate room. தனி அறை.

Camera - an instrument used to take photos. புகைப்படக் கருவி

ஆரோக்ய வாழ்வு

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது சிறுநீரகக் கற்கள் உருவாவது ,இதயநோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலை தடுக்கும்.

Some important  abbreviations for students

 rpm - revolutions per minute

qt - quart

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

ஜூடோ பயிற்சியும் ஒற்றைக் கை சிறுவனும்

குறள் :
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

விளக்கம் :
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.

கதை :
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.

தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.

ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் அவர்கள் நினைத்ததுதான் தவறு. வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். சிறுவனுக்கும், அங்கிருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.

எப்படி குருவே என்னால் ஒரு கையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது? என்று கேட்டான்.

குரு சொன்னார், இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.

நீதி :
நம்மிடம் உள்ள குறையை நிறையாக்குவது மிகப் பெரிய திறமைசாலிக்கான அடையாளம் ஆகும்.

இன்றைய செய்திகள்

27.02.20

★அடையாறு ஆற்றில் கழிவுநீரை கலந்து மாசுபடுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, இழப்பீடு வசூலிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

★இந்தி மொழி தெரியாத மாணவர், ஆள்மாறாட்டம் செய்து, இந்தியில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாணவரையும், அவருக்கு உதவிய அவரது தந்தையையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

★டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் தவறிவிட்டனர். அவர்கள் கடமையைச் செய்வதற்கு மத்திய அரசு ஏன் அனுமதிக்கயளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

★தில்லி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

★தில்லியில் கடந்த 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்  போட்டியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கோ-ரோமன் பிரிவில்  இந்திய வீரா் சுனில் குமாா் தங்கம் வென்றுள்ளார்.

★சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 புள்ளிகளில் முதலிடத்தை இழந்து இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

Today's Headlines

🌸The Southern Zone of National Green Tribunal ordered to put case on those who flow in the sewage water into Adyar and also asked for the compensation from the same party

 🌸Investigation revealed that a student who is not fluent in Hindi impersonated and passed the NEET exam in Hindi and studied at the Madras Medical College.  Subsequently, the student and his father, who assisted him, have been arrested by the CBCID police.

 🌸 "In Delhi the police did not do their duty and also why the Central Government did not allow the police to perform their duties?" the Supreme Court asked in annoyance.

 🌸The United Nation organisation said that they are closely watching the situation in Delhi.

 🌸 Sunil Kumar wins gold in the Greco-Roman division after 27 years in the the wrestling championship tournament which was held in Delhi from 18 to 23

 🌸India's  Virat Kohli has lost the first place by  five points in the ICC Test rankings which is released today by the International Cricket Council (ICC).

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி