1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.1-ல் இறுதி பருவத்தேர்வு கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2020

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.1-ல் இறுதி பருவத்தேர்வு கல்வித்துறை அறிவிப்பு


சென்னையில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ல் தொடங்கி 20-ம் தேதி வரை இறுதி பருவத்தேர்வு நடக்கும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, அனைத்து பள்ளிகளுக் கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 1-ல் தொடங்கி 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதன்படி 1, 3, 5-ம் வகுப்புகளுக்கு காலையும், 2, 4-ம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதற்கான விரிவான தேர்வுக்கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், இதர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கான தேர்வுக்கால அட்டவணையை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி