8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு தனித்தேர்வர்களுக்கானது - அமைச்சர் விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2020

8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு தனித்தேர்வர்களுக்கானது - அமைச்சர் விளக்கம்!


ஏப்ரல் 2020 - ல் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 02 . 04 . 2020 முதல் 09 . 04 . 2020 வரை நடைபெறவுள்ளது . அத்தேர்விற்கு கடந்த ஆண்டில் நிரந்தரமான தேர்வு மையங்கள் அமைக்கக் கோரி தங்களிடமிருந்து பெறப்பட்ட பட்டியலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள தேர்வு மையப் பட்டியல் பார்வை - ல் கானும் கடிதத்துடன் இணைத்தனுப்பப்பட்டது .

அத்தேர்வு மையங்களுக்குரிய முதன்மை கண்காணிப்பாளர்கள் , துறை அலுவலர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் ஆகியோரை நியமனம் செய்து பட்டியலை 13 . 03 . 2020 - க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதுடன் , தாங்களே அப்பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் முதன்மை கண்காணிப்பாளர்கள் , வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள் , துறை அலுவலர்களின் கைபேசி எண் மற்றும் தேர்வு மையத்தின் ( Mail ID ) மின்னஞ்சல் முகவரியை பெற்று அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .

தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு தெரிவு செய்யப்பட்ட விவரத்தினை , தெரிவித்து தேர்வினை சுமூகமாக நடத்திட உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி