எங்க டீச்சர் எங்க? பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2020

எங்க டீச்சர் எங்க? பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதி!


தமிழகத்தில் , பிளஸ் 2 , பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் நடந்து வரு கிறது . மொழிப்பாடங் கள் முடிந்துள்ள நிலையில் நாளை மறு நாள் முதல் பிரதான பாடத்தேர்வுகள் நடை பெற உள்ளது .

பிளஸ் 2 தேர்வு வரும் 24ம் தேதியும் , பிளஸ் 1 தேர்வு வரும் 26ம் தேதியும் முடிகிறது . பிளஸ் 1 பொதுத் தேர் வுக்கு 44 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் , பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு 41 ஆயிரம் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் .

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணியில் , முது நிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்தான் ஈடுபடு வார்கள் . ஆனால் , இந்த முறை 9 , 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசி ரியர்கள் , 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக் கும் இடைநிலை ஆசிரி யர்களுக்கும் கண்காணிப்பு பணி வழங்கப்பட்டுள்ளது . பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு , வரும் 27ம் தேதி தொடங்க உள் ளது . ஆனால் , தேர்வு பணிக்கு பல்வேறு இடங் களுக்குச் செல்லும் ஆசி ரியர்கள் , மீண்டும் மதியம் தங்கள் பள்ளிகளுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது .


3 comments:

  1. சில முதன்மை கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு வேண்டிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுப்பணியிலிருந்து விடுவித்துள்ளதாகவும், தகவல்.... கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் பலர் தேர்வுப்பணியில் உள்ளதாக சொல்கிறார்கள்...

    ReplyDelete
  2. எனது உறவினர் மகன் பயிலும் பள்ளியில் 140 மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள நிலையில் 4 பிரிவிற்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாகவும் மீதமுள்ள ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி