தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் - பேரவையில் முதல்வர் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2020

தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் - பேரவையில் முதல்வர் அறிவிப்பு!


கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 27 . 3 . 2020 முதல் 13 . 4 . 2020 வரை நடைபெறுவதாக இருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் . இத்தேர்வுகள் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு , அதாவது 15 . 4 . 2020 அன்று தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன . 11ஆம் வகுப்பிற்கு 23 . 3 . 2020 மற்றும் 26 . 3 . 2020 நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் , 12ஆம் வகுப்பிற்கு 24 . 3 . 2020 நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி