வருங்கால வைப்பு நிதி முறைகேடு : விசாரணையை தொடங்கியது சிபிஐ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2020

வருங்கால வைப்பு நிதி முறைகேடு : விசாரணையை தொடங்கியது சிபிஐ!


 உத்தரப்பிரதேசமின்சார வாரிய பணியாளர் களின் வருங்கால வைப்பு நிதியை , முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் ( டிஹெச்எஃப் எல் ) முறைகேடாக முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியது .

மத்திய அரசின் விதிகளின்படி , அரசுப் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி ( இபிஎஃப் ) பணத்தை தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் . நிதி நிறு வனங்களில் முதலீடு செய்யக் கூடாது . அதன்படி , உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ( பிசிஎல் ) நிறுவன பணியாளர்களின் இபிஎஃப் பணம் கடந்த 2016 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை தேசியமயமாக் சுப்பட்ட வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந் தது .

அதன் பின் 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது . இந்நிலையில் , பிசிஎல் நிறுவனத்தின் நிதி பிரிவு முன்னாள் இயக்குநர் சுதான்ஷு துவிவேதியின் அறிவுறுத்தலின்பேரில் , கடந்த 2017 - ஆம் ஆண்டு மார்ச்மாதம் முதல் 2018 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அந்த நிறுவன பணியாளர்களின் இபிஎஃப் பணத்தை டிஹெச்எஃப்எல் நிறு வனத்தில் மின்சார வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஏ . பி . மிஸ்ரா முதலீடு செய்துள்ளார் .

இதுதொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது . தேசியம் யமாக்கப்பட்ட வங்கிகளில் இபிஎஃப் பணத்தை முதலீடு செய் யாமல் , பாதுகாப்பற்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக பிசிஎல் நிறுவனத்தின் முன்னாள் செயலர் பிரவீண் குமார் குப்தா , ஏ . பி . மிஸ்ரா , சுதான்ஷு துவிவேதி ஆகியோர் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது . |

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி