தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ( டிஎன்பிஎஸ்சி ) போட்டித்தேர்வுகள் , கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் என்று அமைச்சர் டி . ஜெயக்குமார் அறிவித்தார் .
மீன்வளம் , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைமானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து மீன்வளத் துறை , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி . ஜெயக்குமார் அறிவிப்புகளையும் வெளியிட்டார் .
அதன் விவரம் வருமாறு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பாதுகாப்பு வசதியைப் பலப்படுத்தும் பொருட்டு , விரல் ரேகைப் பதிவு ( Bio - Metric attendance ) , ஜி . பி . எஸ் . , கண்காணிப்பு கேமரா ( CCTV ) மற்றும் ஜாமர் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் ரூ . 5 கோடியில் ஏற்படுத்தப்படும் .
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் . சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் .
சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக் ககத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுடைய மழலையர்களை அலுவலகப்பணி நேரங்களில் கவனித்துக் கொள்ள புதிதாக மழலையர் காப்பகம் ( Creche ) அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 11 அறிவிப்புகள் வெளி யிடப்பட்டன .
காப்பகத்தில் குழந்தைகள் ஒன்று கூடினால் அங்கு கொரோனா நோய் வராதா ? அப்படி வந்தால் அதற்கு அரசு பொறுப்பாகுமா ? தயவுசெய்து கனவு கண்டதெல்லாம் அறிவிக்க வேண்டாம். வேறு ஏதாவது யோசித்து பாருங்கள்.
ReplyDeleteஇது கொரோனாக்காக அல்ல, கணவன், மனைவி இரண்டு பேரும் அரசு வேலை செய்பவர்களாய் இருந்தால் அவர்களின் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இக்காப்பகத்தில் பாதுகாக்கப்படும். மாலையில் குழந்தகளை அழைத்து செல்லலாம்
Delete