ஒரு மாதத்திற்கு இலவச இணைய சேவையை அறிவித்து பிஎஸ்என்எல் அசத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2020

ஒரு மாதத்திற்கு இலவச இணைய சேவையை அறிவித்து பிஎஸ்என்எல் அசத்தல்!


வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 271 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துளளனர்.

இதையடுத்து கொரோனா வைரசை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டிலிருந்து பணியாற்றுவோர் தற்போது சந்தித்து வரும் பிரச்னையாக இணைய தேவை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம், ISP Work @ Home என்ற புதிய பிராட்பேண்ட் திட்டத்தை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி