மாணவர்களின், கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளுக்கும், ஆசிரியர்களின் பணி அனுபவத்துக்கும், எந்த சான்றிதழ்களும் வழங்கப்படாது என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளில் சேர்வதற்கும், வங்கி கடன் மற்றும் அரசு தொடர்பான காரியங்களுக்கும், அனுபவ சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களும், அரசின் கல்வி உதவித்தொகை, நுழைவு தேர்வு விண்ணப்பம் மற்றும் பிற துறைகளின் தேவைக்காக, உத்தரவாத சான்றிதழ் கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு துறைகளின் சலுகைகள் மற்றும் பல்வேறு வகை தேவைகளுக்காக, பள்ளிகள் வழியாக, சி.பி.எஸ்.இ.,யிடம் சான்றிதழ் கேட்டுள்ளனர். சி.பி.எஸ்.இ., தரப்பில், அதுபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்படாது. அவற்றை, சி.பி.எஸ்.இ., விதிகளை பின்பற்றி, பள்ளிகளே வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி