School Morning Prayer Activities - 10.03.2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2020

School Morning Prayer Activities - 10.03.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.03.20

திருக்குறள்


அதிகாரம்: கல்லாமை

குறள் 401:

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

விளக்கம்

பல நூல்களை படிக்காமல் அரங்கம் ஏறுவது கட்டம் இல்லாமல் பகடை ஆடுவது போன்றது.

பழமொழி

Both the child and God are there where they are praised.

 குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.

இரண்டொழுக்க பண்புகள்

1. வெற்றி என்பது தற்காலிகம் எனவே எனது வெற்றியில் பெருமை கொள்ள மாட்டேன்.

2. தோல்வி எனக்கு பாடம் எனவே அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

உங்களின் சிறு செயல்களில் கூட உங்களின் மனம், புத்தி மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருமித்து செயல்படுத்துவதே உங்கள் வெற்றியின் இரகசியம்
      சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு

1."பூமியின் நுரையீரல்" என்றழைக்கப்படும் காடு எது?

அமேசான் காடு

2."தமிழகத்தின் பண்டிகை நகரம்" என்றழைக்கப்படும் நகரம் எது?

மதுரை.

English words & meanings

Magnate - a person who is successful in business, வணிகத்தில் வெற்றி பெற்ற மனிதர்

Magnet- a piece of substance that attract some metals, காந்தம்.

ஆரோக்ய வாழ்வு

எலும்பு மஜ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது .இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஜ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கின்றன.

Some important  abbreviations for students

RIP - Rest In Peace

DELL - Digital electronic link library

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

நரிக்குட்டி சிங்கக் குட்டியாகாது

ஒரு பெரிய கானகத்தில் ஆண் சிங்கம் ஒன்றும், ஒரு பெண் சிங்கம் ஒன்றும் சேர்ந்து வாழ்ந்து வந்தன. எப்போதும் இரண்டும் இணையாகவே சென்று வேட்டையாடி சாப்பிட்டு வந்தன. அந்தச் சிங்கத் தம்பதியருக்கு இரண்டு குட்டிகள் பிறந்தன. அதனால், ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் வேட்டைக்குச் சென்று பெண் சிங்கத்திற்கும் குட்டிகளுக்கும் இரைகளைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த ஆண் சிங்கத்துக்கு ஒரேயொரு நரிக்குட்டி மட்டும் தான் கிடைத்தது. அது அந்த நரிக்குட்டியைக் கொண்டு வந்து பெண் சிங்கத்திடம் கொடுத்தது.

பெண் சிங்கம் நரிக்குட்டியின் மீது இரக்கப்பட்டு உண்ணாமல் தன் சிங்கக் குட்டிகளோடு இணைத்து வளர்த்து வந்தது.

நன்றாக வளர்ந்த அந்த மூன்று குட்டிகளும் ஒரு நாள் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றன. வழியில் ஒரு பெரிய யானையைப் பார்த்ததும் நரிக்குட்டி பயந்துவிட்டது. அது அங்கிருந்து ஓடியது. அதனைப் பார்த்த இரண்டு சிங்கக் குட்டிகளும் அதன் பின்னாலேயே ஓடிவந்து குகைக்குள் ஒளிந்துக் கொண்டது.

இதனைப் பார்த்த பெண் சிங்கம் நடந்ததைத் தன் குட்டிகளிடம் விசாரித்தது. யானையைப் பார்த்து இவன் பயந்து விட்டான். அதனால் நாங்களும் இவன் பின்னாலேயே வந்து விட்டோம் என்றன.

பின்னர் சிங்கக் குட்டிகள் இரண்டும் நரியைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன. உடனே நரிக்குக் கோபம் வந்து விட்டது. உடனே பெண் சிங்கத்திடம், இவர்கள் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்? நான் எந்த விதத்தில் இவர்களைவிடத் தாழ்ந்தவன்? நான் இவர்களை வெல்வேன் என்று கூறியது.

பெண் சிங்கம் நரியைத் தனியே அழைத்துச் சென்று, நீ சிங்கக் குட்டி அல்ல. நீ நரிக்குட்டி. யானையை வெல்லும் தீரமும் வீரமும் நரிக்கு எப்படி இருக்கும்? நரிக்குட்டிச் சிங்கக் குட்டிகளுடன் வளர்வதனாலேயே அது சிங்கக் குட்டியாகிவிடுமா? நீ நரி என்பதனை இவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்னர், நீ இங்கிருந்து ஓடிச் சென்று தப்பித்துக்கொள் என்று எச்சரித்தது. உடனே அந்த நரிக்குட்டி அங்கிருந்து ஓடிவிட்டது.

நீதி :
அறிஞர்கள் அமர்ந்திருக்கும் சபையில் நீயும் அமர்ந்திருப்பதால் மட்டும் நீ அறிஞன் ஆகி விட முடியாது. அறிஞன் அறிஞன் தான். நீ நீ தான்.

இன்றைய செய்திகள்

10.03.20

◆கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக, தமிழகப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது.

◆ரூ.1 கோடியில் இந்திய உணவுக் கழகம் சார்பில் நாட்டிலேயே முதன் முறையாக தஞ்சையில் உணவு அருங்காட்சியகம்: பண்டைய பொருட்கள், அரியவகை நெல் ரகங்களை தானமாக அளிக்க வேண்டுகோள்.

◆சென்னை உட்பட நாடு முழுவதிலும் ரயில்வே துறை அச்சகங்கள் மூடும் முடிவு ஜுன் 30 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பு.


கரோனா: சவுதி பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு காலவரையற்ற விடுமுறை.

◆உலக வெள்ளிப்பதக்கம் வென்றவரும் டாப் குத்துச் சண்டை வீரருமான இந்தியாவின் அமித் பங்கல் (53 கிலோ உடல் எடைப்பிரிவு) ஒலிம்பிக் போட்டிககளுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

◆ஜோர்டானில் நடைபெற்று வரும் ஆசியா-ஒஷியானா குத்துச்சண்டை தகுதிப் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் விகா கிருஷண், பூஜா ராணி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

Today's Headlines

🌸 To prevent Coronavirus, Biometric System has been stopped  in Tamil Nadu schools.

 🌸 India's first  food museum was started in Tanjore on behalf of Indian Food Corporation of India at Rs.1crore.  Request is put to  public to donate ancient commodities and rare varieties of paddy.

 🌸The shutting down of Railway Presses  all over the country including Chennai have temporarily  postponed till June 30.

 🌸Corona:  Saudi schools and universities are indefinitely closed

 🌸World silver medalist and top boxer India's Amit Pangal (53 kg bodyweight) was qualified for the Olympics.

 🌸India's Vika Krishan and Pooja Rani have qualified for the Tokyo Olympics by advancing to the semi-finals of the Asian-Oceania Boxing Championships in Jordan.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி