சமூக பரவலை நோக்கி சென்னை?.. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 103 பேர் பாதிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2020

சமூக பரவலை நோக்கி சென்னை?.. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 103 பேர் பாதிப்பு


சென்னையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை திடீரென தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு யாரிடம் இருந்து இந்த தொற்று ஏற்பட்டது என்ற சங்கிலி தொடரை கண்டுபிடிக்க  முடியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இதிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட முடியும். இல்லாவிட்டால் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலை தான் தொடர வாய்ப்புள்ளது. யாருக்கு கொரோனா தொற்று உள்ளதோ அவர் சம்பந்தப்பட்ட மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி அவர்களுக்கு பரிசோதனை செய்தால் மட்டுமே இந்நோய் தொற்றை தடுக்க முடியும்.

அப்படி ஒரு நோயாளியை கண்டறியும் போது அவருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத்துறையினர், காவல் துறையினருடன் இணைந்து கண்டறிந்து வருகின்றனர். சைபர் கிரைம் உதவியுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் சங்கிலி தொடரை உடைத்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு கொரோனா வந்தது என்று கண்டறிய முடியாதது அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் தான் இந்த நிலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் -- பேர் உள்ளனர். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை -- ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை சமூக பரவலை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி