ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட, 8ம் வகுப்பு தனித்தேர்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2020

ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட, 8ம் வகுப்பு தனித்தேர்வு எப்போது?


பள்ளிகளில் படிக்காமல், தனியாக தேர்வு எழுதுவோருக்கான, 8ம் வகுப்பு தேர்வு, ஜூனில் நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வு நடத்தாமல், அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது; 10ம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது.அதேநேரத்தில், ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட, 8ம் வகுப்பு தனித்தேர்வு நடத்தப்படவில்லை. அதனால், தனித்தேர்வர்கள்குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 'மே, 4ல், ஊரடங்கு தளர்த்தப்பட்டால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் முடிந்த பின், 8ம் வகுப்பு தனித் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது. 'அனேகமாக, ஜூனில் நடத்தப்படலாம்' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி