புத்தகம், ரீசார்ஜ் கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2020

புத்தகம், ரீசார்ஜ் கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதி


நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில், புத்தகம், மின் விசிறிக் கடைகள் மற்றும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், சில சேவைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் தளர்வு செய்து சமீபத்தில் அறிவித்திருந்தது.

இது தொடர்பான தனித்தனி உத்தரவுகளில், இதுவரை வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சேவைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சில கேள்விகளைப் பெற்ற பின்னர் சில கடைகளை திறக்க அனுமதிக்கும் படியான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதன்படி, மாணவர்களுக்கான கல்வி புத்தகங்களின் கடைகள், மின்விசிறி கடைகள் முழு அடைப்பின் போது திறக்க அனுமதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

ஊரடங்கின் இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் நலன் கருதி இந்த சேவைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரவுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், படுக்கையறை உதவியாளர்கள் மற்றும் வீடுகளில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு வழங்குநர்கள் மற்றும் ப்ரீபெய்ட் மொபைல் இணைப்பிற்கான ரீசார்ஜ் செய்வோர் உள்ளிட்ட பொது பயன்பாடுகள் சேவைகளை வழங்குவோர்களுக்கும் முழு அடைப்பின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

நகர்ப்புறங்களில் அமைந்துள்ள ரொட்டி தொழிற்சாலைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மாவு ஆலைகள், பருப்பு ஆலைகள் போன்ற உணவு பதப்படுத்தும் பிரிவுகள் முழு அடைப்பு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்படும். இருப்பினும், அலுவலகங்கள், பட்டறைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி