வறுமையால் வாடும் மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஆசிரியர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2020

வறுமையால் வாடும் மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஆசிரியர்கள்!


திருப்பூரில், வறுமையால் வாடும் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் இணைந்து, உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், நெய்காரம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்கள் மாணவர்களை தொடர்பு கொண்டு, குடும்ப சூழலை கேட்டறிந்து, தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.அப்பள்ளிதலைமையாசிரியர், மணிசெல்வன் கூறியதாவது:இப்பகுதியில் தேங்காய் தொட்டி தொழிற்சாலையை நம்பிய குடும்பங்கள் தான் அதிகம். அனைத்தும் முடங்கியதால், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், சிலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.இவர்களின் குழந்தைகள், அதிகளவில், எங்கள் பள்ளியில் படிக்கின்றனர்.

பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, மாணவர்களை தினமும் தொடர்பு கொண்டு, தேவைகளை கேட்டு வருகிறோம். நேரில் உதவ முடியாத பட்சத்தில், அவர்களின் வங்கி கணக்குகளுக்கு, 200, 500, 1,000 ரூபாய் என, முடிந்த தொகையை அனுப்பி வருகிறோம். இதனால், 400க்கும் மேற்பட்டமாணவர்களின் குடும்பங்கள், தங்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி