வாட்சாப்பில், நாம் பேசுவதை எழுத்துகளாக்கி தமிழில் அனுப்புவது எவ்வாறு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2020

வாட்சாப்பில், நாம் பேசுவதை எழுத்துகளாக்கி தமிழில் அனுப்புவது எவ்வாறு?


வாட்சாப்பில், நாம் பேசுவதை எழுத்துகளாக்கி அனுப்பும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு நமது செல்பேசியில் கூகுள் ப்ளேஸ்டோரைத் திறந்து அதில் GBoard தேர்வு செய்யவும். பின்னர் அதனை நிறுவவும். ஒரு விண்டோ திறக்கும். வாட்சாப்பைத் திறந்து தகவல் அனுப்ப வேண்டியவரின் பெயரை தேர்வு செய்யவும். தகவல் உள்ளிடும் பகுதியை தேர்வு செய்யவும். இப்போது மைக் ஐகான் கிடைக்கும். பெரியதாக பச்சை நிறத்தில் உள்ள மைக் அல்ல. சிறியதாக நீலநிறத்தில் உள்ள மைக்கினை தேர்வு செய்யவும்.

வரும் விண்டோவில் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். கிடைக்கும் விண்டோவில் Language தேர்வு செய்யவும். அதில் நிறைய மொழிகள் கொடுத்து இருப்பார்கள் அதில் தேர்வாகி உள்ள ஆங்கிலத்தினை அன்லாக் செய்திடவும் ஸ்க்ரோல் செய்து கீழே வரவும்.

தமழ் என்பதில் இந்தியாவினை தேர்வு செய்து பின்னர் கீழே உள்ள சேவ் கிளிக் செய்யவும். இப்போது மீண்டும் முன்பு சொன்னது போல தட்டச்சு பகுதியை தேர்வு செய்து மைக்கில் நாம் அனுப்ப விரும்பும் செய்தியை தமிழில் பேசவும். நீங்கள் பேசப்பேச அது தட்டச்சு செய்யப்பட்ட உரையாக மாறுவதைக் காணலாம். அதனை நாம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்பலாம். இதேபோல நீங்கள் நோட்பேடினையும் ப்ளே ஸ்டோரில் திறந்து இதே போல தமிழில் பேசி அதை எழுத்துகளாக்கி மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். பயன்படுத்துங்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி