ஊரடங்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2020

ஊரடங்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 3 ஆயிரத்தும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி பிறப்பித்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் உத்தரவு நீட்டிக்க மத்திய அரசு ஆலோசிக்கு வருவதாக கூறப்படுகிறது.அமெரிக்காவில் பாஸ்டன் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி வரை அல்லது செப்டம்பர் இரண்டு வாரம் வரைநீட்டிக்கப்படலாம் எனத் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் ஜூன் மாதம் இறுதியில் தான் கரோனா பாதிப்புஉச்சத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு ஏப்ரல் 15க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி