மத்திய மற்றும் மாநில அரசாங்கம் கொரோனா என்ற ஆட்கொல்லி வைரசை சமூக தொற்றாக ( கொள்ளை நோய் ) ஆகாமல் தடுப்பதற்காக வேண்டி ஊரடங்கு உத்தரவை 14.04.2020 ( செவ்வாய் கிழமை ) வரை பிறப்பித்துள்ளது. மேலும் சுகாதார துறை , வருவாய் துறை மற்றம் காவல் துறையினரின் மூலமாக தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது. எனவே , நம்முடைய நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்துவரும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு நாம் முழு ஒத்துழைப்ப கொடுப்பது நம் ஒவ்வொருவருடைய சட்டப்படியான கடமையாகும். சுகாதார துறை , வருவாய் துறை மற்றம் காவல் துறை அதிகாரிகளுக்கு விசாரணையின் போது மனமுவந்து தன்னிச்சையாக உண்மையான விவரங்களை அளிப்பதும் நம்முடைய சட்டப்படியான கடமையாகும்.
ஆவ்வாறு அரச துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்ப கொடுக்க மறுப்பது மற்றம் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் தகுந்த காரணமில்லாமல் வெளியில் நடமாடுவது , கூட்டம் கூடுவது வாகனங்களில் பயணம் செய்வது கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்க பரவ வழிவகுப்பதுடன் சமூக தொற்று ( கொள்ளை நோய் ) நிலைக்கு வழிவகுத்துவிடும் எனபதால் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம். 1939 , கொள்ளை நோய் தடுப்பு சட்டம். 1897 மற்றம் இந்திய தண்டனைச் சட்டம் , 1860 ஆகியவற்றின் கீழ் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க கூடிய குற்றங்களாகும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி