பாலிசிதாரர்களுக்கு IRDA புதிய அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2020

பாலிசிதாரர்களுக்கு IRDA புதிய அறிவிப்பு!



வாழ்நாள் காப்பீடு, மருத்துவக்காப்பீடு, வாகனக்காப்பீடு வைத்திருப்பவர்கள் மார்ச், ஏப்ரல் மாதம் ப்ரீமியம் தொகை செலுத்த கூடுதலாக 30 நாட்கள் வழங்கி இந்திய காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம்(ஐஆர்டிஏ) அறிவித்துள்ளது.
காப்பீடு தாரர்கள் பாலிசியைப் புதுப்பிக்கும் காலம் மார்ச், ஏப்ரல் மாதத்தில் வந்தாலும் கூடுதலாக ஒருமாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். இது மோட்டார் வாகனத்தில் 3-வது நபர் பாலிசி, மருத்துவக்காப்பீடு, ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

வைரஸ் தொற்றைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊடரங்கு பிறப்பித்துள்ளதால் பாலிசி ப்ரீமியம் செலுத்துவதிலும், பாலிசியை புதுப்பிப்பதிலும் பல்வேறு சிரமங்களை வாடிக்கையாளர்கள் சந்திக்கக்கூடும் என்பதால் இந்தசலுகையை ஐஆர்டிஏ வழங்கியுள்ளது
அதேசமயம் மே 31-ம் தேதிவரை பாலிசிக்கள் முதிர்ச்சி அடைந்தால், அதற்குரிய பணம் முழுமையாக பாலிசிதாரருக்கு வழங்கப்படும். சில குறி்ப்பிட்ட விதிமுறைகளுடன் செட்டில்மென்ட் வாய்ப்பும் வழங்கப்படும்.
கடந்தவாரம் ஐஆர்டிஐ வெளியிட்ட அறிவிப்பில், மருத்துவக் காப்பீடு, மோட்டார் வாகனக் காப்பீட்டின் 3-வது நபருக்கான ப்ரீமியம் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதிவரை இருந்தால், ஏப்ரல் 21-ம் தேதிக்குள்ளாக செலுத்தலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
மாதவாரியாக ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசமும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு ரிட்டன் தாக்கல் செய்வோருக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி