இரண்டு மணி நேரத்தில் இழப்பீடு ! IRDA அதிரடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2020

இரண்டு மணி நேரத்தில் இழப்பீடு ! IRDA அதிரடி!


ஊரடங்கு நடைமுறையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் விதமாக , ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளில் பிரீமியம் கட்டும் கெடு தேதியை ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும் ' என்று உத்தரவு பிறப்பித்தது இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( ஐ . ஆர் . டி . ஏ . ஐ . )

அத்துடன் , ' காப்பீட்டு பிரீமியத்தை பாலிசிதாரர்கள் ஆன்லைனில் கட்டும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் ' என்றும் உத்தரவு பிறப்பித்தது . இந்த நிலையில் , மருத்துவச் சிகிச்சைக்கான செலவைச் சமாளிக்க பலரும் கஷ்டப்படுவதால் , பணமில்லா சிகிச்சைக்கான அங்கீ காரம் ( Authorisation for Cashless Treatment ) குறித்த கோரிக்கையைப் பெற்றதிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குத் தெரிவிக்க வேண்டும் " என்று தற்போது ஐ . ஆர் . டி . ஏ . ஐ சொல்லியிருக்கிறது .

இதேபோல் , மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்வதற்கான செட்டில்மென்ட் பில் தரப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள் மூன்றாம் தரப்பு நிர்வாகிக்கு ( டி . பி . ஏ ) தெரிவிக்க வேண்டும் ; இது தொடர்பாக அனைத்துப் பொதுக் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்புடைய டி . பி . ஏ - களுக்குத் தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளைக் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது .

பலருக்கும் நன்மை செய்யும் அறிவிப்புதான் இது !

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி