இன்று 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2020

இன்று 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!


தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யும்.

விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது, இதில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, திருச்சி, மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அதிகபட்ச வெப்ப நிஅலி 42 டிகிரி செல்சியஸாக இருக்கும். எனவே அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும்.

இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் 11.30 முதல் 3.30 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

மே-4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நாளை முடிவுக்கு வருகிறது. சென்னையில் அதிகபட்ச வெயில் நேற்று 39 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி