பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்க உள்ளது. இதற்கான மையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச்சில் நடந்தன. அதில், பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும்முடிந்து விட்டன; பிளஸ் 1க்கு மட்டும், ஒரு பாடத்துக்குதேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கால், கல்வித் துறையில், அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதனால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்த பணி, அடுத்த வாரம் துவங்க உள்ளது; இதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன.மாவட்ட வாரியாக, விசாலமான, இட வசதி உள்ள பள்ளிகள், விடை திருத்தும் மையங்களாக அமைக்கப்பட உள்ளன.
சோப்பால் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமிநாசினி பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்தல் போன்ற, கொரோனா வைரஸ் ஒழிப்பு நடைமுறைகளும், விடைத்தாள் திருத்த மையங்களில், கடைப்பிடிக்கப்பட உள்ளன.
அதேபோல, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், முகக் கவசம் வழங்கப்படுவதுடன், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே, மையங்கள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வேறு மாவட்டத்தில் இருப்பவர்கள் அங்கேயே பேப்பர் திருத்த வாய்ப்பு உள்ளதா
ReplyDeleteஅவ்வாறு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்
DeleteIt's best for other district teachers
Deleteமாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்க்கு பயண நேரம் 7-8மணி நேரம் பஸ் நன்றாக இயங்கும் போதே ஆகும். இப்போ????
Deleteஆசிரியர்கள் வசிக்கும் பகுதி அருகே மையங்கள் அமைத்தல் சிறந்தது தனியார் பள்ளி ஆசிரியர் அவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் சிறந்ததாக இருக்கும் . இன்னும் தனியார் பள்ளி ஆசிரியர் ஏப்ரல் மாதம் சம்பளம் தரப்படவில்லை
ReplyDeleteWhich school sir you
Deleteகாலையில் உள்ளே செல்லும் போது கை சோப்பு போட்டு கழுவுவர்கள். கிருமி நாசினி அடிப்பார்கள்.உள்ளே சென்ற பிறகு தும்மல் வந்தால் பரவாதா
Deleteநம்பிக்கை தானே வாழ்க்கை?
DeleteApril ah even May salary not credited yet...
DeleteThere is any chance of rexam
ReplyDelete