'ஆன்லைன்' தேர்வு முறை: தயாராகும் கல்லூரிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2020

'ஆன்லைன்' தேர்வு முறை: தயாராகும் கல்லூரிகள்


ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட கல்லுாரி தேர்வுகளில், செய்முறை மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வுகளை, மே 15 முதல் 31வரையும், எழுத்துத்தேர்வுகளை, ஜூலை 1 முதல் 31 வரையும் நடத்தி முடிக்குமாறு, பல்கலை. மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டுள்ளது.

கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: ஊரடங்கு மட்டுமல்லாது, புயல் உள்ளிட்ட பேரிடர்காலங்களில், கல்லுாரிகளில் வகுப்புகள் தடைபடுவதோடு, தேர்வுகளும் தள்ளிப்போகின்றன. இதனால், மாணவர்களின் படிப்பு வீணாகிறது. இனி வரும் ஆண்டுகளில், ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் என்பது, கட்டாயமாகும் என்பதை, யு.ஜி.சி., சூசகமாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், அரசுப்பள்ளி மேல்நிலை மாணவர்களுக்கு, இலவச'லேப்டாப்'கள் வழங்கப்படுகின்றன. கல்லுாரிகளில் சேரும்போது, தமிழக மாணவர்களை பொறுத்தவரை, பெரும்பாலானோரிடமும் 'லேப்டாப்'கள் இருக்கின்றன. இருப்பினும், 'லேப்டாப்' உள்ளிட்ட இணைய சாதனங்களை, கல்விக்காக மாணவர்கள் பயன்படுத்துவது குறைவு. தனியார் கல்லுாரிகள், ஆன்லைன் தேர்வு முறைக்கேற்ப தயார்படுத்திக்கொண்டு வருகின்றன.அரசுக்கல்லுாரிகளிலும் இது சாத்தியமே.

இனி, இணையவழி மற்றும் ஆன்லைன் தேர்வு தான் என, யு.ஜி.சி., முடிவெடுத்தால், தமிழக கல்லுாரிகள் அதற்கு எளிதில் தயாராகிவிடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி