ஊரடங்கால் கூலி வேலைக்கு செல்லும் ஆசிரியர்கள் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2020

ஊரடங்கால் கூலி வேலைக்கு செல்லும் ஆசிரியர்கள் !


ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ,அங்குள்ள  ஆசிரியர்களை நிலை குலையச் செய்துள்ளது.

கை நிறையப் பட்டங்கள் வாங்கி , தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு மாதங்களாகச் சம்பளம் கொடுக்கப்படவில்லை.

வயதான பெற்றோர், சின்ன வயதுக் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

அங்குள்ள யதாத்ரி- புவனகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தவர், சிரஞ்சீவி.

எம்.ஏ., எம்.பில்.மற்றும் பி.எட். ஆகிய மூன்று பட்டங்கள் பெற்றவர்.

 அவரது மனைவி பதமா எம்.பி.ஏ. பட்டம்  பெற்றவர்.

பத்மாவும் தனியார் பள்ளி ஆசிரியை.

ஊரடங்கு காலத்துக்கு முன்பு இருவரும் சுளையாக 60 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தனர்.

ஊரடங்கு அவர்கள் பிழைப்பில் மண்ணை போட்டுவிட்டது.

வேலையும் இல்லை. சம்பளமும் இல்லை.

வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வது?

விவசாய கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். தினமும் 300 ரூபாய் சம்பளம்.

இதே நிலை நீடித்தால் என்னவாகும்?

‘’ நேற்று வரை விவசாயிகள் தற்கொலை சம்பவங்களை நாடு பார்த்தது. இந்த நிலை தொடர்ந்தால் நாளை ஆசிரியர்கள் தற்கொலை செய்தியைப் படிக்கப்போகிறார்கள்’’ என்று வேதனையுடன் சொல்கிறார், சிரஞ்சீவி.

– ஏழுமலை வெங்கடேசன்

12 comments:

  1. இவர்கள் SBI PPF ACல் ,LIC,R-PLI ல் பணம் சேர்த்திருந்தால் தற்போது லோன் எடுத்து உணவு சாப்பிட்டிருக்கலாம்...

    பல நல்ல சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதை ஆசிரியர்கள்,படித்தவர்களே தெரிந்து கொள்வது இல்லை.....

    நல்ல திட்டங்களில் சில:
    1.SBI PPF SCHEME
    2.NPS SCHEME IN SBI
    3.RPLI IN POST OFFICE
    4.INSURANCE PLAN IN LIC AND SBI....

    SAVE NOW AND ENJOY IN FUTURE......

    ReplyDelete
  2. Moodu da fake news ..... saving ennachu poi poi ..

    ReplyDelete
  3. Tamil Nadu la athukkum Vali illa

    ReplyDelete
  4. தமிழ்நாட்டில் எனக்கு தெரிந்த சில பள்ளிகளில் இப்பவும் 5000/6000 மட்டுமே சம்பளமாக ஆசிரியர்களுக்கு கொடுக்கிறார்கள், அதை வைத்து என்ன செய்ய முடியும்,🔨🔨🔨

    ReplyDelete
    Replies
    1. Theeiyudhula appuram edhuku andha job ku pora arevu irruku tha na vera better a job theadu padi govt job try pannu...business pannu...arevu illa na adhay job ku poai thola ..

      Delete
  5. dai nan oru alu masam 20000 salary vangitu 1 lack kita savings vechuruken da... masam 60000 husband and wife work pannitu kandipa 5 lacks mela savings vechurupanga, summa kathai vidathinga da....

    but salary kudukalanu yaru kita complaint panna, maximum schools run by politicians

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி