பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2020

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடைக்குமா?


'மே மாத சம்பளம் வழங்க வேண்டும்' என, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, மாநில ஒருங்கிணைப்பாளர், செந்தில் குமார் அறிக்கை:

ஜெயலலிதா, 2011ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களை, 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்தார். அனைத்து மாதங்களும் சம்பளம் வழங்க, 99.29 கோடி ரூபாய் ஒதுக்கினார்.ஆனால், பணி நியமனம் செய்த பின், மே மாதம் சம்பளம் தருவதில்லை. அரசாணையில், 11 மாதங்களுக்கு மட்டும் சம்பளம் என்று குறிப்பிடாத போதும், கல்வித்துறை, ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்வது வருந்தத்தக்கது.

ஒரு மாதம் சம்பளம் இல்லாமல், அடுத்த மாதம், எப்படி குடும்பத்தை நடத்த முடியும்; தற்போது ஊரடங்கால், பகுதி நேர ஆசிரியர்கள், மிகுந்த கவலையுடன் உள்ளனர். மே மாத சம்பளம், 7,700 ரூபாய் கொடுத்தால், பெரும் உதவியாக இருக்கும்.இதற்கு, முதல்வர் நிதி ஒதுக்கி, 12 ஆயிரம் பேருக்கு, மே மாத சம்பளம் வழங்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

9 comments:

  1. ஏப்ரல் சம்பளம்?

    ReplyDelete
    Replies
    1. Already credited our school account if you collected our school

      Delete
  2. ஏப்ரல் மாதம் சம்பளம் கிடைக்குமா சார்

    ReplyDelete
  3. தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்களை உடன் வைத்து கொண்டு விதிகளுக்கு மீறி மே மாதம் ஊதியம் ஒவ்வொரு ஆண்டும் செந்தில்குமார் பெயரில் பதிவு செய்ய படாத சங்கத்தின் பெயரில் மே மாதம் ஊதியம் கேட்பது நியாயமா??

    மத்திய அரசு திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்கள் பணி அமர்த்த பட்டனர் என்று பல முறை தமிழக கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே பணி செய்வதாக பகுதி நேர ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர்கள் என்று கூறப்பட்டது...
    மத்திய அரசு பத்து மாதத்திற்கு மட்டுமே பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் தர சொல்லி இருக்கும் நிலையில் தமிழக அரசு 11மாதமாக பிரித்து மாதம் 7700வீதம் பிரித்து வழங்கி வருகிறது..

    இது கூட தெரியாமல் செந்தில்குமார் அவர்கள் மே மாதம் ஊதியம் கேட்க இந்த ஆண்டு கொரோனா காரணம் காட்டி மே மாதம் ஊதியம் பெற்று இரண்டாவது முறையாக அரசுக்கு எதிராக வழக்கு தொடர திட்டம் தீட்டி வருகிறார்கள் பகுதி நேர ஆசிரியர்கள் என்று அரசுக்கு தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. தகுதி இல்ல தகுதி இல்ல சொல்ற நீ. Name list collect panni release pannu. Vetti command podatha.

      Delete
  4. தகுதி இல்லாத போலி பகுதி நேர ஆசிரியர்களை உடன் வைத்து கொண்டு விதிகளுக்கு மீறி மே மாதம் ஊதியம் ஒவ்வொரு ஆண்டும் செந்தில்குமார் பெயரில் பதிவு செய்ய படாத சங்கத்தின் பெயரில் மே மாதம் ஊதியம் கேட்பது நியாயமா??

    மத்திய அரசு திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்கள் பணி அமர்த்த பட்டனர் என்று பல முறை தமிழக கல்வி துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே பணி செய்வதாக பகுதி நேர ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர்கள் என்று கூறப்பட்டது...
    மத்திய அரசு பத்து மாதத்திற்கு மட்டுமே பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் தர சொல்லி இருக்கும் நிலையில் தமிழக அரசு 11மாதமாக பிரித்து மாதம் 7700வீதம் பிரித்து வழங்கி வருகிறது..

    இது கூட தெரியாமல் செந்தில்குமார் அவர்கள் மே மாதம் ஊதியம் கேட்க இந்த ஆண்டு கொரோனா காரணம் காட்டி மே மாதம் ஊதியம் பெற்று இரண்டாவது முறையாக அரசுக்கு எதிராக வழக்கு தொடர திட்டம் தீட்டி வருகிறார்கள் பகுதி நேர ஆசிரியர்கள் என்று அரசுக்கு தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. Unakubvera velaye Ilayaraja EPO Evan varuvane ukandhurupiya poi velaya paru

      Delete
    2. Yena ivandha andha appointment order adichiruva velakenna s.a.r sorudhana thugara illa vera yedhachum thigaraya veradha thigarana idhaye podu poli poli nu soru tha thigarana ne soinadha proof panuda velakenna vai kiliya vekamey illama pesara yenda ne yaru ney theriyadhu thuppu keta neye indha comments podurapa sendhil kumar pesaradhu thapilla puriyudha yega appointment order ah vagi padi da loose weekly 3 days work ana 11 month salary nu ne soina kadhaila illada velakenna

      Delete
  5. Ni comment podum poduellam elarum kaluvi kaluvi oothurangala apo kuda buthi varalaya cha idhalam oru polapu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி