தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2020

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) செயல்முறைகள்!


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) செயல்முறைகள் , சென்னை -600006

ந.க.எண் .001002 / 02 / இ 2 / 2020

நாள் 15.05.2020

பொருள் பணியமைப்பு- கொரானா வைரஸ் ( Corono Virus ) ஊரடங்கு அரசால் 18.05.2020 முதல் வாரத்துக்கு ஆறு வேலைநாட்கள் அறிவிக்கப்பட்டமை -50 % பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிதல் - சார்பு .

பார்வை அரசாணை ( நிலை ) எண் .239 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் .15.05.2020 . =

==== கோரானா வைரஸ் தொற்று காரணமாக அரசால் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட பிறகு தற்போது நடைமுறைகள் அரசால் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து அரசு அலுவலகங்கள் செயல்படுவது குறித்து பார்வையிற்காண் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .

அதனடிப்படையில் 18.05.2020 முதல் வாரத்துக்கு ஆறு வேலைநாட்கள் ( சனிக்கிழமை உட்பட ) அரசு அலுவலகங்கள் பணியாற்ற வேண்டும் , எனவும் , 50 சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனால் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து வகை பணியாளர்களும் 18.05.2020 முதல் சுழற்சி முறையில் அலுவலகப் பணிக்கு வருகை தரவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது .

தனிநபர் இடைவெளியை பின்பற்றிட ஏதுவாக ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டிய பணியாளர்கள் குறித்து 18.05.2020 அன்று உரிய அறிவுரைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது .

பெறுநர்

அனைத்து வகை பணியாளர்கள் இணை இயக்குநர் ( பணியார் தொகுதி ) பள்ளிக் கல்வி இயக்ககம் , சென்னை -6

 நகல்

 பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் நகல் முதுநிலைக் கண்காணிப்பாளர் , பள்ளிக் கல்வி இயக்கககம் ,
சென்னை -6

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி