ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2020

ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.


அரசு பள்ளி கணினி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சியை, அமைச்சர் செங்கோட்டையன், 'வீடி யோ கான்பரன்ஸ்' முறையில் துவக்கி வைத்தார்.

தொழில்நுட்ப துறையில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனை, மாணவர்களிடம் மேம்படுத்தும் நோக்கில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்பு கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக, கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில், அரசு பள்ளி கணினி ஆசிரியர்களுக்கு, 'பைத்தான் சாப்ட்வேர்' பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணையும் ஆசிரியர்களுக்கு, இரண்டு வாரங்களுக்கு, ஆன்லைனில் கற்றல் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி திட்டத்தை, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று வீடியோ கான்பரன்ஸ் முறையில் துவக்கி வைத்தார்.

பயிற்சியில், மாநிலம் முழுதும் இருந்து, 2,000 ஆசிரியர்கள் பங்கேற்கபதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு தினமும், காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

2 comments:

  1. Minister sir. Pg trb chemistry counselling thodanki vaiunka sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி