பிளஸ் 1 விடை திருத்தம் ஏற்பாடுகள் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2020

பிளஸ் 1 விடை திருத்தம் ஏற்பாடுகள் துவக்கம்


பிளஸ் 1 விடைத்தாள்களை, நாளை மறுநாள் முதல், திருத்தும் மையங்களுக்கு அனுப்ப, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்துள்ளன. பத்தாம் வகுப்புக்கு, ஜூன்,15 முதல் தேர்வுகள் நடக்க உள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 விடை திருத்தம், மே, 27ல் துவங்கி நடந்து வருகிறது.

இதையடுத்து, பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட உள்ளன. அதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், கட்டுக்காப்பு மையங்களில் இருந்து, திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாளை மறுநாள், இந்த பணியை துவங்கி விரைவில் முடிக்க வேண்டும். ஜூன், 10 முதல், விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி