பொறியியல் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி : "5 பாடங்களில் ஒரு பாடத்திற்கு விலக்கு" - அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை.
கொரோனா ஊரடங்கால் பொறியியல் கல்லூரிகளில் பாடங்கள் முழுமையாக முடிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தள்ளி வைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், 5 பாடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட 4 பாடங்களில் இருந்து கேள்வி கேட்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்திருப்பதாகவும், மேற்கண்ட நடைமுறைகள், அரியர்ஸ் வைத்துள்ளவர்களுகு பொருந்தாது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த முடிவால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அப்படி என்றால்.. பின் வரும் காலங்களில் நடக்கும்..
ReplyDeleteGate.. Ese..Tancet.. Trb.. Tnpsc.. Tneb.. இதர engineering related recruitment எதிலும் இந்து 5வது unitல் இருந்து கேள்விகளே வராது என்று அண்ணா பல்கலைக்கழகம் உறுதியளிக்க வேண்டும்