நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு சீல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2020

நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு சீல்


கோவை வெரைட்டி ஹால்  ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியான சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கடந்த 2 தினங்களாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு பிரேம் என்பவர் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் வட்டாட்சியர் அருள்முருகன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு சீல் வைத்தனர். ஆனால் நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை என்று பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி