இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி - ஜூலையில் சோதனை.
இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரசுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை பரிசோதனை நடத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பு மருந்தை பரிசோதிக்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மருத்தை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை ஜூலையில் மனிதர்களிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜுலை என்றால் நாளைதானே?????சீக்கிரம்?????��������������������
ReplyDeleteஇந்த ஊரடங்கு மூலம் காசு இல்லாம மக்கள் நிறைய பெயர் ரொம்ப கஷ்டப்படுவாங்க கடவுளே. கொஞ்சம் பெயர் சமாளிப்பாங்க.போக போக முடியாது கடவுளே.முதல்வர் ஐயா பாவம்.இதுக்கு மேல முடியாது. ஊரடங்கு சொல்லவும் முடியல சொல்லாம இருக்கவும் முடியல.மருந்து கண்டுபிடிப்பு வெற்றி ஆகட்டும்.
ReplyDeleteமூன்று மாதத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட இம்ப்ரோ உள்ளிட்ட பல மருந்துகளையும்,பல மருத்துவர்கள் வழங்கிய மாற்று மருத்துவ ஆலோசனைகளையும் இந்திய மருத்துவ கழகம் முதலில் விரைவில் ஆய்வு செய்து முடிவை வெளியிடும் வேலையைப் பாருங்க...
Deleteஅலோபதி மட்டும் தான் தீர்வு என்ற மனநிலையை மக்களிடம் திணிக்காதீர்கள்...