பள்ளிகளுக்கு புத்தகங்கள் கொடுத்தாச்சு , அடுத்து சீருடை ரெடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2020

பள்ளிகளுக்கு புத்தகங்கள் கொடுத்தாச்சு , அடுத்து சீருடை ரெடி!


நாமக்கல் மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சீருடை தைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரண்டு மாவட்ட கல்வி அலுவலகமும், 15 வட்டார கல்வி அலுவலகமும் இயங்கி வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து மதிய உணவு சாப்பிடும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டிற்கு நான்கு பருவ இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான சீருடைகளை மாணவ, மாணவிகளின் அளவிற்கேற்ப தைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


 நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் வேலூர் மகளிர் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் சீருடைகள் தைக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், இங்கு கோஆப்டெக்ஸ் மூலம் சீருடைக்கான துணிகள் வந்துள்ளது. இதனை இச்சங்கத்தில் உள்ள 1450 உறுப்பினர்களுக்கும் வெட்டி கொடுக்கப்படுகிறது. இவர்கள் அதனை பெற்று சென்று வீட்டில் வைத்து சீருடைகளை தைத்து சங்கத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.  தற்போது, முதல் பருவ சீருடை துணிகள் வந்துள்ளதால் அதனை மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பெறப்பட்ட மாணவர்களின் அளவுகளின்படி சீருடை துணிகளை வெட்டி சங்க உறுப்பினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இவர்கள் சுமார் 45 நாட்களில் தைத்து சங்கத்தினரிடம் ஒப்படைப்பர். வழக்கமாக பரமத்தி வேலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் உறுப்பினர்கள் தாங்கள் தைக்கும் துணிகளை பெற்றுச்செல்வார்கள்.  தற்போது, கொரோனா நோய் பரவல் காரணமாக, நாமக்கல் கோட்டை நகராட்சி துவக்கப்பள்ளியில் வைத்து சீருடை துணிகள் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளிலேயே சீருடை தைக்கும் உறுப்பினர்களிடம் துணிகள் வழங்கப்படுகிறது.

3 comments:

  1. மாறுதல் கலந்தாய்வு எப்போது?

    ReplyDelete
  2. கடவுளுக்குத்தான் தெரியும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி