டிக்கெட் இல்லாத பஸ் அறிமுகம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2020

டிக்கெட் இல்லாத பஸ் அறிமுகம்!


கொரோனா தொற்று மண்டலமாக மாறி வரும் சென்னையில், பணப் பரிவர்த்தனையை தவிர்க்கும் வகையில், டிக்கெட்டில்லாத பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், தலைமைச் செயலக ஊழியர்களும் தப்பவில்லை என்பது, சமீப சோதனைகளில் தெரிய வந்துள்ளது.எனவே, தலைமைச் செயலக ஊழியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபடும் மாநகர பஸ்களில், பணப் பரிவர்த்தனையை தவிர்க்க, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதன் முதல்கட்டமாக, இரண்டு பஸ்களில், 'பேடிஎம், கூகுள் பே' வழியாக டிக்கெட் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தி.நகர் மற்றும் தாடண்டர் நகரில் இருந்து புறப்படும் இரண்டு பஸ்களில், இந்த சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, சென்னையில் இயங்கும், 300 பஸ்களிலும் இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி