+2 மறுதேர்வு இன்று நடக்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2020

+2 மறுதேர்வு இன்று நடக்கிறது.


பிளஸ் 2 தேர்வில், ஒரு பாடத்தை எழுதாமல் விடுபட்டவர்களுக்கு, இன்று மறுதேர்வு நடத்தப்படுகிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 24ல் பொது தேர்வு முடிந்தது. ஊரடங்கு அறிவிப்பு காரணமாக, மார்ச் 24ம் தேதி நடந்த தேர்வை, சில மாணவர்கள் எழுதவில்லை. மொத்தம், 36 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என, தெரிய வந்தது. இதையடுத்து, தேர்வுத்துறை சார்பில், மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்களிடம் விருப்ப கடிதம் பெறப்பட்டது.மொத்தம், 780 மாணவர்கள் மட்டுமே, தேர்வை எழுத விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கான மறுதேர்வு, இன்று தமிழகம் முழுதும் நடக்கிறது.

பொது போக்குவரத்து இல்லாததால், மறு தேர்வுக்குவிருப்பம் தெரிவித்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுத சலுகை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி