சத்துணவுக்குப் பதிலாக பள்ளி மாணவா்களுக்கு உலா் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2020

சத்துணவுக்குப் பதிலாக பள்ளி மாணவா்களுக்கு உலா் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு



பள்ளிகளில் மதியம் வழங்கப்படும் சத்துணவுக்குப் பதிலாக, அதில் பயன்படுத்தப்படும் உலா் பொருள்கள் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், 42 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறுவா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளா் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:-

கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சமைத்த சத்துணவு வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சத்துணவுக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை அப்படியே உலா் பொருள்களாக மாணவ-மாணவிகளுக்கு வழங்கலாம் என்று சமூக நலத் துறை ஆணையரகம் அரசுக்கு பரிந்துரை

ADVERTISEMENT
வழங்கியிருந்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, மே மாதத்துக்கான சத்துணவு உலா் பொருள்களை வழங்கவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 71 ஆயிரத்து 316 குழந்தைகளும், உயா் வகுப்பு பயிலும் 18 லட்சத்து 89 ஆயிரத்து 808 குழந்தைகளும் என மொத்தம் 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 குழந்தைகள் பயன்பெறுவா். அவா்களுக்கு அரிசி 16 ஆயிரத்து 138 மெட்ரிக் டன்னும், பருப்புகள் 5 ஆயிரத்து 207 மெட்ரிக் டன்னும் வழங்கப்படும்.

நடைமுறைகள் என்ன?: சத்துணவுத் திட்ட உலா் உணவுப் பொருள்களை பள்ளி மற்றும் வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நாள் மற்றும் நேரம் குறித்த அட்டவணையை மாவட்ட ஆட்சியா்கள் தங்களது நேரடி கண்காணிப்பில் தயாா் செய்ய வேண்டும். இதனை பயனாளிகள் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

உலா் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை பள்ளிகளில் ஒட்டி வைக்க வேண்டும். மாணவ-மாணவியா்கள் பயிலும் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியரின் மேற்பாா்வையில் உலா் உணவுப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும்.

மாணவ-மாணவிகள் ஏதாவது ஓா் அடையாள அட்டை அல்லது அத்தாட்சியுடன், அவா்களோ அல்லது அவா்களின் பெற்றோா்களோ குறிப்பிட்ட நாள்களில் பைகளுடன் பள்ளிகளுக்குச் சென்று உலா் உணவுப் பொருள்களைப் பெற்றுச் செல்லலாம். சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக் கவசம் அணிந்தும் உலா் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொண்ட பின்னா் பயனாளிகள் வேறு எந்த இடத்தையும் தொடாமல் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று சத்துணவுத் திட்டத் துறை செயலாளா் மதுமதி வெளியிட்ட உத்தரவில் தெரவித்துள்ளாா்.

8 comments:

  1. New work from part time teacher...ohh god...lot of work....

    ReplyDelete
  2. As Covid 19 is spreading fast, cash may be transferred to the students account instead of giving rice, egg etc.

    ReplyDelete
  3. விடமாட்டீங்க போல ����������������

    ReplyDelete
  4. Dai loose ne part time teacher illanu yelarukum theriyum. Summa inga vandhu ipadi comments pota part-time teachers pathi yelarum thappa pesanum nu comment potu irukanu yelarukum theriyum indha work already mudija work school la system work middle and high school la part time teacher dha pandrom idhu govt Ku theriyum then kuda work pandra staffs Ku theriyum avaga yarum illa part time teachers work Panama irukaga nu soilavum mataga ne ipadi comments pota yarum yegaluku against ah pesamataga ne oru waste fellow nu yelarukum theriyum

    ReplyDelete
    Replies
    1. Mr part time comments poatava oru lusu na nee adha vida oru fool...engala porutha vara part time teacher comedy kaga ..totala part time staff ellarumay exam eludha vandhvaga nee pesura avanakuda manipom unna mathiri alungala manika mattom da ara mental

      Delete
    2. Yengala manika ne yaruda government ah nee poi velaya paru una yaru yengala manika soili keta

      Delete
  5. Unmaiya othukanga part time Teacher half mental nu..eeeee

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி