மாணவ மாணவியர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குதல் சார்ந்து சில புதிய அறிவுரைகள் வழங்கி - சமூக நல ஆணையர் -செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2020

மாணவ மாணவியர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குதல் சார்ந்து சில புதிய அறிவுரைகள் வழங்கி - சமூக நல ஆணையர் -செயல்முறைகள்



கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மே 2020 கோடை விடுமுறை நாட்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உலர் உணவாக வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது . துவக்கப் பள்ளி பயனாளிகளுக்கு மே மாதத்திற்கு 3100 கிராம் அரிசியும் , 1200 கிராம் பருப்பும் , உயர் துவக்கப் பள்ளி பயனாளிகளுக்கு 4650 கிராம் அரிசியும் 1250 கிராம் பருப்பும் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே , மேற்காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்த மாணவ மாணவியர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . இது தொடர்பாக கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .

1. சத்துணவு மையங்களில் மாணவ மாணவியர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவிலான அரிசி மற்றும் பருப்பு ஆகியவை மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் அதனடிப்படையில் உரிய அட்டவணை தயார் செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் . அரிசி மட்டும் மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு பருப்பு இல்லாத பட்சத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தேவைப்பட்டியல் அளித்து , உடன் பெற்று பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . கூடுதல் பருப்புக்கான செலவினம் உணவூட்டுச் செலவினத்திலிருந்து வழங்கப்படவேண்டும் .

2. உணவூட்டுச் செலவினத் தொகையிலிருந்து கூடுதல் பருப்புக்கான தொகைக்கு உரிய ஒதுக்கீடு பெறப்பட்டால் மட்டுமே பட்டியல் வாயிலாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு பெற்று வழங்க இயலும் . எனவே , உணவூட்டுச் செலவினத்திலிருந்து கூடுதல் பருப்புக்கான தொகைக்கு மறுமதிப்பீடு செய்யக் கோரி அரசுக்கு முன்மொழி அனுப்ப ஏதுவாக கொள்முதல் செய்யப்படும் கூடுதல் பருப்புக்கான தொகை துல்லியமாக கணக்கிடப்பட்டு கணக்குத் தலைப்பு வாரியான விவரங்களை உடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் .

3. உலர் உணவுப் பொருட்கள் வழங்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் உதவியுடன் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது .

4. அரசாணையின் இணைப்பில் கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உடனடியாக செயல்திட்டம் வகுத்து , நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .

5. ஒவ்வொரு சத்துணவு மையம் வாயிலாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் விபரம் , கையொப்பம் பெற்ற ஒப்புகை பதிவேடுகளின் நகல்கள் , புகைப்படங்கள் ஆகியவற்றை தொகுத்து மாவட்ட அளவில் வைக்கவேண்டும் . அரசால் கோரப்படும்போது உடனடியாக வழங்கப்பட வேண்டும் .

6. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( சஉதி ) மற்றும் கூடுதல் கல்வி அலுவலர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோர் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும்போது பார்வையிடுதல் வேண்டும் . பெற்றோர் மற்றும் பயனாளிகளின் கருத்துக்களை கேட்டறிதல் வேண்டும் .

7. கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றி , முகக்கவசம் அணிந்து அவ்வப்போது சோப்பினால் கைகளை கழுவிக் கொண்டு சரியான அளவுகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் .

8. பயனாளிகள் அல்லது பெற்றோர்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

Fulk Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி