இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2020

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதில் வகுப்பு வாரியாக மாணவா்களுக்கு எத்தனை மணிநேரம் இணைய வழி வகுப்புகளை நடத்தலாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் முழுமையான, பகுதியளவு, ஆஃப்லைன் மோடு ஆகிய 3 முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் ஆக 3-ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாா்ச் 25ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது முடக்கம் சிறிது சிறிதாகத் தளா்த்தப்பட்டாலும், இன்னும் கல்வி நிலையங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மாணவா்களின் கல்வி கடந்த 4 மாதங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தனியாா் கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் இணைய வழி வகுப்புகளை தங்கள் மாணவா்களுக்கு நடத்தத் துவங்கின. இந்த இணையவழி வகுப்புகளால் மாணவா்கள் சிரமத்துக்குள்ளாவதாக பெற்றோா்கள் தரப்பிலிருந்து புகாா்கள் எழுந்த நிலையில், இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:

* எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தக் கூடாது.

*ஆன்லைன் வகுப்புகளுக்கு இடையே 10 முதல் 15 நிமிடங்கள் வரை இடைவெளி விட வேண்டும்.

*1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை என 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

*9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை என 4 முறைக்கு மிகாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்.

*எந்த ஒரு ஆன்லைன் வகுப்பும் 45 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

*ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகும் 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை விட வேண்டும்.

*ஒரு ஆசிரியர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 6 ஆன்லைன் வகுப்புகள், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும்.

*பள்ளி வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.



முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி, ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என நெறிமுறைகளில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

4 comments:

  1. Is there any chance to change part time engineering degree course in New education policy.

    ReplyDelete
  2. மாணவர்கள் பள்ளியில் இருந்தால்தான் ஆசிரியர்களுக்கும் வேலை. இங்கு அவர்களை பழித்துக்கொண்டு அவர்களைக் கண்டு வயிறு எரியும் சிலருக்கும் வேலை. இந்த அரசு பணியிடங்களைக் குறைத்துக் கொண்டு தனியார்மயம் என்று சென்றுகொண்டிருக்கிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகளை தனியார் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று வீதிக்கு ஒரு பி.எட் கல்லூரி என்று திறக்கப்பட்டு எப்படி தரமாக நடந்து எவ்வளவு பேரை சொத்துக்களை விற்று பி.எட் படிக்கச்செய்து, பிறகு தகுதித் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து அதற்கும் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் உருவாகியுள்ள நிலையில் பணம் செலுத்தி படித்து தேர்ச்சி பெற்று தற்போது அந்த சான்றிதழும் காலாவதியாகும் நிலையில் நாம் உள்ளோம். இப்படி எத்தனையோ வகையில் லட்சக்கணக்கான நாம் வேலை வாய்ப்பு பறிபோகியுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளை நம்பியுள்ள நாம் அதனை கொச்சைப் படுத்தாமல் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வேலைவாய்ப்பை குறைக்கும் அரசாணை சென்ற ஆண்டில் உருவாக்கப்பட்டு அதனை செயல்படுத்தி பணியிடங்கள் குறைத்துள்ளார்கள். அதனை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். இந்தக் குமுறல் யாரிடமும் இங்கு வெளிப்பட்டதில்லை. மாறாக ஆசிரியர்கள் வெட்டியாக சம்பளம் வாங்குகிறார்கள் என்றுமட்டும் பொங்குகிறார்கள். தகுதித்தேர்வு என்றவுடன் நீ 2013, 2017 என்று சண்டை போடுகிறார்கள். வேறுவழியின்றி அரசின் தவறான தேர்வுமுறையால் வாரத்தில் 3 அரைநாட்கள் என்று வேலை கொடுக்கப்பட்டு மற்ற நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் மீதும் சண்டை போடுகிறார்கள். முதலில் நமக்கான வழியை அடைத்துக் கொண்டிருக்கிற அரசை நோக்கி நமது வாழ்வாதாரத்திற்கு என்ன வழி என்று கேட்க வேண்டும் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Adei neenga ipdiye polambitu irunga... Ungaluku pinnadi degree padichu 2015 la b.ed padichavan elam 2017 2019 trb la pass panni velai vangitan, neenga innum 2013 tet valvatharamnu pichai eduthutu irukinga. Poi olunga padichu thirumba trb tnpsc pass pannura valiya parunga. Summa katharitu irukinga. En govt job than valkaiya... Private la velai illaiya. Unnoda thaguthiku sariyana velai thedi po, private school la monthly 40+ tharanga, unaku talent irundha poi athula seru, athu epdi govt 100000 peruku teacher job thara mudiyum, ne 90 mark eduthtu pass panna athuku velai kudupangala. Tet oru thaguthi thervu than, like ctet, net slet. Athula pass panna posting podanunu claim panna mudiyathu. Appadiye tet ku life time validity kuduthalum 10 paisaku value ila.

      Delete
  3. Aparam ethuku exam,pass pannuna vangaluku enna palan.private schoola tet pass pannuna vangaluku salary extra poduranga la.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி