கல்லூரிகளில் சேர்வதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2020

கல்லூரிகளில் சேர்வதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி மாற்றம்


தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 25 - ஆகஸ்ட் 5 வரை இருந்த நிலையில் ஆகஸ்ட்-1 முதல் ஆகஸ்ட் 10 வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அவகாசம் கோரியதால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மாணாக்கர்களின் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1 - ம் தேதி முதல் ஆரம்பம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பப்பதிவு கடந்த 20-7-2020 அன்று துவங்கப்பட்டது. ஜூலை 21 -ம் தேதி வரை 1,00,620 விண்ணப்பப்பதிவுகளும் , ஜூலை 22 -ம் தேதி 53,342 விண்ணப்பப்பதிவுகளும் , ஜூலை 23 -ம் தேதி 34,924 விண்ணப்பப்பதிவுகளும் , ஜூலை 24 தேதி , 20,351 விண்ணப்பப்பதிவுகளும் பெறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,09,237 மாணாக்கர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர் . இதில் , 1,27,975 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர் . மேலும் , விண்ணப்பதிவிற்கு கடைசி நாள் ஜூலை 31 ஆகும். இந்நிலையில் , இன்று முதல் , அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணாக்கர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளனர். எனவே , மாணாக்கர்களின கோரிக்கையை ஏற்று , சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய துவங்கப்படும் நாளான ஜூலை 25 -ம் முதல் ஆகஸ்டு 5 -ம் தேதி வரை இருந்ததற்கு பதிலாக , வருகிற ஆகஸ்ட் 1 -ம் தேதி முதல் 10 -ம் தேதி வரை மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி