கொரோனாவின் தீவிரத் தன்மையை குறைக்க முதியவர்களுக்கு பிசிஐி தடுப்பூசி போட முதலல்வர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2020

கொரோனாவின் தீவிரத் தன்மையை குறைக்க முதியவர்களுக்கு பிசிஐி தடுப்பூசி போட முதலல்வர் உத்தரவு.


நோயின் தீவிரத் தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஐி தடுப்பு மருத்து செலுத்த  முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு அம்மாவின் அரசு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில், கொரோனா நோய் தொற்றை தடுக்கவும் சிகிச்கைகள் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை  தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கோவிட்-19 நோய் தொற்று, முதியவர்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த  நோய், இருதயம் சார்ந்த நோய்கள் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தாக்குவதற்கான வாய்ப்புகள்  அதிகம் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் கடந்த 50 ஆண்டுகளாக பிசிஐி தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு  பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை (Innate Immunity)  அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பிசிஐி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு  செலுத்துவதன் மூலம் நோய்வுற்ற விகிதமும் உயிரிழப்பு விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக  தெரியவந்துள்ளது.

 மேற்கூறிய காரணங்களின் அடிப்படையிலும், இன்றளவில் கோவிட்-19 நோய் தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத  நிலையிலும் முதியவர்களுக்கு பிசிஐி தடுப்பு மருந்தினை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ  ஆராய்ச்சி கழகம் தமிழ்நாடு அரசின் அனுமதியினை கோரியிருந்தது. இதனை ஏற்று உடனடியாக உரிய அனுமதியை  வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த சோதனை  முயற்சியை ICMR நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெகு விரைவில்  தொடங்கியுள்ளது.

பிசிஐி தடுப்பு மருந்தினை முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் கோவிட்-19 நோயின் தீவிரத் தன்மையை  குறைக்கவும் மருந்துவமனையில் அனுமதியை தவிர்க்கவும் உயிரிழப்பை குறைக்கவும் பேருதவியாக அமையும்.  மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி அவர்களின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள்  தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி