அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், தனியார் பள்ளி மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.எனவே, அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேரும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், இலவச நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக, நேரடி வகுப்புகள் நடத்த முடியாததால், 'ஆன்லைனில்' பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இரண்டு மாதங்களாக நடந்து வரும் பயிற்சி வகுப்புகள், இந்த மாதம் முடியவிருந்தன.இந்நிலையில், நீட் தேர்வு, ஜூலையில் இருந்து, செப்டம்பர், 13க்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால், ஆகஸ்ட் வரை, நீட் பயிற்சி வகுப்புகளை நீட்டித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி