TET - தகுதித் தேர்வு சான்றிதழுக்கான காலத்தை நீட்டித்து,படிப்படியாக வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் - த.மா.க.கோரிக்கை: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2020

TET - தகுதித் தேர்வு சான்றிதழுக்கான காலத்தை நீட்டித்து,படிப்படியாக வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் - த.மா.க.கோரிக்கை:


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.ஜி.கே.வாசன்.எம்.பி அவர்கள் விடுக்கும் அறிக்கை:

"2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு சான்றிதழுக்கான காலத்தை நீட்டித்து,படிப்படியாக வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் " த.மா.க.கோரிக்கை:

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 80,000 பேர்கள்,கடந்த ஆறரை ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்கள்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.சாதாரணமாக தேர்வில் தேர்ச்சி என்பது எக்காலத்திற்கும் பொருந்தும்.ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013 ஆம் ஆண்டு தேர்வு பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். தற்போது தேர்வு நடைபெற்று ஆறரை ஆண்டுகள் ஆகியும் பணி வழங்கப்படவில்லை.இன்னும் சில மாதங்களில் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில் இருக்கின்றன.

மத்திய மற்றும் மாநில பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்விற்கு வழங்கப்படக்கூடிய தகுதிச் சான்றிதழ், ஆயுட்காலச் சான்றிதழாக இருக்கின்றது.அதே போல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு காலகட்டத்தை மீட்க முடியுமா?அல்லது நீட்டிக்க முடியுமா? என்று அரசு பரிசீலித்து ஓர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ,வேலை கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களுக்கு தற்போதைய பாடத்திட்டம் தெரியாது என்று அரசு கருதுமேயானால் அவர்களுக்கு பணி ஆணை வழங்கிய பிறகு,ஒரு குறுகிய கால மறு பயிற்சியை,தற்கால பாடத்திட்டத்தின் படி பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களை பணி செய்ய அனுமதிக்கலாம்.இவற்றை பள்ளிக்கல்வித்துறையும் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஆகவே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்களுக்கு தகுதிதேர்வு சான்றிதழுக்கான காலத்தை மறுபரிசீலனை செய்து நீட்டித்தும் படிப்படியாக வேலைவாய்ப்பை வழங்கியும் அவர்களது வாழ்வில் ஔிதீபம் ஏற்ற வேண்டும் என்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

- ஜி.கே.வாசன்.

59 comments:

  1. உங்களின் கோரிக்கைக்கு மிக்க நன்றி ஐயா.மாண்புமிகு முதல்வர் அவர்கள் எங்களின் இன்னல்களை உறுதியாகக் களைவார் என நம்புகின்றோம்.

    ReplyDelete
  2. எங்களுக்கு உதவியதற்கு மிக்க நன்றி ஐயா நீங்கள் என் ஹீரோ

    ReplyDelete
  3. Neengalavadhu engalapathi yosikarengaley, nandri ayya

    ReplyDelete
  4. SLET,NET,madhiri life certificate TET vandum.

    ReplyDelete
  5. ethu eppadi nadakum Yarukum theeiyathu.teachers naam thaan muttal pola erkirathai varuthapadikirom.2013-2017 varai posting poda vendum,erkanavae upari teachers 7200 Govt school work pannranga,enna kodimainga sir ethu.

    ReplyDelete
    Replies
    1. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    2. 😭😭😭😭😭😭😭

      Delete
  6. Thank you sir !!! ethai marakkamattom

    ReplyDelete
  7. Thank you sir, Many leaders insisted our demand to Tamilnadu government like that. But, will the Govt accept our demand?

    ReplyDelete
  8. நன்றி ஐயா, பல தலைவர்கள் எங்கள் கோரிக்கையை தமிழ்நாடு அரசாங்கத்திடம் வலியுறுத்தினர். ஆனால், எங்கள் கோரிக்கையை அரசு ஏற்குமா?

    ReplyDelete
  9. இந்த செய்தியை எதிர் கட்சி தலைவரும் வலியுறுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  10. மிக்க நன்றி ஐயா ,கண்டிப்பா ஒரு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்,

    ReplyDelete
  11. Thank you very much sir your consider our situation

    ReplyDelete
  12. ஜி கே வாசன் அவர்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  13. Nanri ayya tahir katchi thalaivarum korickai vaithaal nandraga irrukkum

    ReplyDelete
  14. மிக்க நன்றி அய்யா, எங்கள் வாழ்வில் விளக்கேற்றுங்கள்...

    ReplyDelete
  15. மிக்க நன்றி அய்யா, எங்கள் வாழ்வில் விளக்கேற்றுங்கள்...

    ReplyDelete
  16. மிக்க நன்றி ஐயா..

    ReplyDelete
  17. Neengal pali kalvi Amcher oirukkunum .thank you sir.

    ReplyDelete
  18. மிக்க நன்றி

    ReplyDelete
  19. அ"மிச்சர்" அவர்களே நாட்டாமை படம் பாத்த மாதிரியே இருக்கீங்க

    ReplyDelete
  20. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதித் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் இல்லாமல் வாழ்நாள் தகுதியாக மாற்றப்பட்டார் மட்டுமே தேர்ச்சி பெற்ற அனைவரும் பயன் பெறுவர்.

    ReplyDelete
  21. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதித் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் இல்லாமல் வாழ்நாள் தகுதியாக மாற்றப்பட்டால் மட்டுமே தேர்ச்சி பெற்ற அனைவரும் பயன் பெறுவர்.

    ReplyDelete
  22. Thank you sir for supporting us.

    ReplyDelete
  23. Thank you sir for supporting us.

    ReplyDelete
  24. Nice. I am very impressed with your work because your work provide me a good information

    Folder Lock 7.8.7

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி