பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2020

பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 1 மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு, நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு, 25ம் தேதி முதல், விடைத்தாள் நகல் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.


விடைத்தாளை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்ய வேண்டும். விடைத்தாள் நகலை பார்த்த பின், மதிப்பெண்களை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றோ, விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றோ விரும்பினால், தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.அரசு தேர்வு துறையின் மேற்கண்ட இணையதளத்தில், அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சேவை மையங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். நாளை முதல் செப்., 2 வரை விண்ணப்பிக்க, அவகாசம் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி