பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2020

பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் , மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத்துறை

*தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி கூறியுள்ளார்.

*இதுதொடர்பான அறிக்கையில், பிளஸ்1 மாணவர்கள், பிளஸ் 2 மறு தேர்வர்கள் தங்களின் இணைய மதிப்பெண் பட்டியலை பள்ளியிலும், தேர்வெழுதிய  மையத்திலும் நாளை முதல்  பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

*அதேபோல், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு பிளஸ் 1 மாணவர்கள்  ஆகஸ்ட் 5 முதல்12-ம் தேதி வரையும்.

*பிளஸ் 2 மறுதேர்வர்கள் ஆகஸ்ட் 5, 6, 7-ம் தேதிகளிலும் பள்ளிகள், தேர்வெழுதிய மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

*விடைத்தாள் நகல் பெற எல்லா பாடங்களுக்கும் 275ரூபாயும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் உயிரியல் பாடத்துக்கு 305ரூபாயும், இதர பாடங்களுக்கு 205ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி