"பள்ளி திறந்தாலும் பிள்ளைகளை அனுப்பமாட்டோம்"- 62% பெற்றோர்கள் தயாரில்லை என ஆய்வில் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2020

"பள்ளி திறந்தாலும் பிள்ளைகளை அனுப்பமாட்டோம்"- 62% பெற்றோர்கள் தயாரில்லை என ஆய்வில் தகவல்

இந்தியாவில் கொரோனா காரணமாக கடைப்பிடிக்கப்படும் தொடர் ஊரடங்குகளால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. செப்டம்பர் 1ம் தேதியன்று பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், தனியார் நிறுவனம் சார்பில் பெற்றோர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், 62 சதவீத பெற்றோர்கள் செப்டம்பர் 1ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குழந்தைகளை அனுப்பமாட்டோம் என்று மறுப்புத் தெரிவித்துள்ளனர். 23 சதவீத பெற்றோர்கள் அனுப்புவோம் என்றும் 15 சதவீதம் முடிவெடிக்கவில்லை என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.


அண்மையில் லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்பட்டாலும் அடுத்த 60 நாட்களில் 6 சதவீதம் மக்கள் மல்டிப்ளக்ஸ் மற்றும் தியேட்டர்களுக்குச் செல்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த 60 நாட்களில் மெட்ரோ மற்றும் உள்ளூர் ரயில்களில் பயணம் செய்வோம் என 36 சதவீத மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

பெரும்பாலான பெற்றோர், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு முடிவெடுக்கக்கூடாது என்று விரும்புகின்றனர். பதிலாக ஆன்லைன் கல்வி, தொலைக்காட்சி, வானொலி உள்பட வேறு வழிகளில் கல்வி கற்பிக்க அரசு முயற்சி செய்யலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. முதல்ல பள்ளியைத் திறக்கட்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி